குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானைப் பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்ப்பட்டுள்ளார் என்று கல்கிஸைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்தேமுல்ல, மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது நபரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.