நீர்கொழும்பிலும் கையெழுத்து வேட்டை! – மூவினத்தவர்களும் பெருமளவில் பங்கேற்பு.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி மூவின மக்கள் வாழும் நீர்கொழும்பில் இன்று (25) வெள்ளிக்கிழமை கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

நீர்கொழும்பு பஸ் நிலையம் முன்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்தக் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

இதில் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.