கண்டியில் உக்ரைனிய பெண் யுத்தம் வேண்டாம்” என தனிநபாராக போராட்டம்.

ரஷ்யா – உக்ரைன் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு நாடுகளிலுள்ள உக்ரைனியர்கள் யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள உக்ரைனிய பெண்ணொருவர் நேற்று கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்டார். யுத்தம் வேண்டாம் என்ற பதாதைகையுடன் தனியொருவராக கோஷம் எழுப்பினர்.

குறித்த பெண்ணின் செயற்பாடு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சுற்றுலா பயணிகளும் அவதானித்தனர். இலங்கையில் அதிகளவான ரஷ்ய சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.