சஜித் அணியின் ஓயாத அலை 15இல் ஆரம்பம்!

அரச கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டு அமைச்சர்கள் இருவர் வெளியேற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ‘ஓயாத அலை’ எனும் பெயரின் கீழ் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த அரச எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சஜித் தலைமையில் நேற்று நடைபெற்ற முக்கிய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.