மழைக்காப்பு கூடாரத்தின் கீழான திராட்சைப் பயிர்ச்செய்கை விழா.

கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சிநிலையமும் யாழ். பிரதி மாகாண விவசாயப் பணிமனையும் இணைந்து நடாத்திய மழைக்காப்பு கூடாரத்தின் கீழான திராட்சைப் பயிர்ச்செய்கையின் அறுவடை விழா நேற்று 09.03.2022 புதன்கிழமை இளவாலை முள்ளானைப் பிரதேசத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. அ.சிவபாலசுந்தரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தார்.

மழைக்காப்பு கூடாரத்தின் கீழான திராட்சைப் பயிர்ச்செய்கையானது திராட்சை பயிர்ச்செய்கைகை நோய்த்தாக்கங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்குடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பயிர்ச்செய்கை முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.