அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக வெளிவரும் செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை – பொலிஸ் ஊடக பேச்சாளர்

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த உறுப்பினரான அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்ததாக வெளியாகும் செய்திகள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லையென பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அங்கொட லொக்காவின் மரணம் குறித்து உறுதியான தகவல்களை பெற்று கொள்ள இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான தகவல்களை இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயினும் இதுவரை உத்தியோகபூர்வமான எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.