சர்வதேச நாடுகளிலுள்ள இலங்கையர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் செயல்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் ஜப்பானிலிருந்து 148 இலங்கையர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் எயார் லயன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் ஊடாக அழைத்து வரப்பட்ட குறித்த 148 பேரும் P.C.R பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரத்திலிருந்து 286 பேர் நாட்டுக்கு வருகை தந்தனர்.

மத்தல சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வருகை தந்த இவர்கள் P.C.R பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed.