வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டிலிருந்து வேலை – எரிபொருள் பாவனையை குறைக்க புதிய பரிந்துரை.

ரஷ்யா – உக்ரைன் போர் நிலைமை காரணமாக தற்போதைய உலகளாவிய ரீதிய எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வை வழங்குவதற்கான 10 பரிந்துரைகளை சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) வெளியிட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளை படிப்படியாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் நுகர்வோரின் பழக்கங்களை மாற்றுவதன் மூலம் 4 மாதங்களில் உலகில் எரிபொருள் பாவனையை பெரல் 2.7 ஆல் குறைப்பதற்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள முடியம் என எரிபொருள் பரிசோதைனை குழு தெரிவித்துள்ளது.

குறித்த 10 பரிதுரைகள் பின்வருமாறு…

* வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்

* அதிவேக நெடுஞ்சாலைகளில் வேக வரம்பை மணிக்கு 10 கி.மீ ஆக குறைத்தல்.

* முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.

* ஞாயிற்றுக்கிழமைகளை நகரத்தில் மோட்டார் வாகனங்கள் இல்லாத நாளாக மாற்றுதல்.

* எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க தனியார் வாகனங்களின் இடத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

* பெரிய நகரங்களுக்கு தனியார் வாகனங்கள் நுழைவதைக் கட்டுப்படுத்துதல். (திகதி முன்பதிவு, வாகன எண் தகடுகளின்படி வருகை அமைப்பு)

* பொருட்களை கொண்டுசெல்லும் போது திறமையான போக்குவரத்தை உறுதி செய்தல்.

* விமானப் போக்குவரத்திற்குப் பதிலாக அதிவேக ரயில் மற்றும் இரவு ரயில் சேவையை பழக்கப்படுத்துதல்.

* வணிக வகுப்பு விமானங்களை நிறுத்திவிட்டு மாற்றுப் பயன்பாடுகளுக்கு மாறுதல்.

* பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களைப் பயன்படுத்துதல்.

Leave A Reply

Your email address will not be published.