இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை.

மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவுத்திட்டத்தில் உணவின் அளவை குறைப்பதற்கு பதிலாக அதற்காக செலுத்தப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவு திட்டத்தில் உணவின் அளவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமையின் ஊடாக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.