முஷாரப்பிடம் 5000 ரூபா தாளை நீட்டிய சாணக்கியன்.

நாடாளுமன்றத்தில் முஷாரப் எம்.பி சற்றுமுன் உரையாற்றும்போது அவர் முன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளை நீட்டியபடி நின்றார் சாணக்கியன் எம்.பி .

ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பின்னர், நாட்டின் நிலைமை குறித்தும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும் முஷாரப் எம்.பி பேசினார்.

அதன்போது அவர் முன் சென்ற சாணக்கியன் எம்.பி ,ஐயாயிரம் ரூபா தாளை நீட்டியபடி அதனை பெற்றுக்கொண்டு பேசுமாறு சைகை செய்தார். இதன்போது சபையில் களேபரம் ஏற்பட்டது.ஆளுங்கட்சி எம்.பிக்கள் இதன்போது சாணக்கியனுக்கு எதிர்ப்பினை வெளியிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.