லிங்குசாமியுடன் இணையும் சிம்பு !

ஆனந்தம் , ரன் , சண்டைக்கோழி போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிவர் தான் இயக்குனர் லிங்குசாமி. பையா படத்திற்கு பிறகு இவர் இயக்கிய வேட்டை , அஞ்சான் , சண்டைக்கோழி 02 ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சண்டக்கோழி 2.

இந்த நிலையில் தற்பொழுது இவர் “தி வாரியர் ” என்ற படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்து வருகிறார் . இந்த படத்தினை ஸ்ரீநிவாஸ் சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது . படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விட்டது .

“தி வாரியர் ” படம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது . மேலும் இந்த படத்தை தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் ,மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது .

இந்த நிலையில் படத்தின் இயக்குனரான லிங்குசாமி நடிகர் சிம்புவை இந்த படத்தில் பாட வைக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளார் . நடிகர் சிம்புவிற்கு இயக்குனர் லிங்குசாமிக்கும் ஆரோக்கியமான உறவு இருக்கிறது .ஏற்கனவே லிங்குசாமி சிம்புவுக்காக ஒரு கதை கூறி உள்ளார் .அந்த கதை சிம்புக்கு பிடித்துப்போக அதற்கும் ஓகே சொல்லிவிட்டார் சிம்பு என்று தகவல் வெளியாகி இருக்கிறது .

மேலும் “தி வாரியர் ” படத்திற்காக சிம்பு பாடலை பாட ஒப்புக்கொண்டார் என்றும் ,தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாட உள்ளார் சிம்பு என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . பிஸியான நேரத்திலும் சிம்பு லிங்குசாமியின் மீதுள்ள மரியாதையின் காரணமாக பாடலை பாட உடனே ஒப்புக் கொண்டுள்ளார் . தெலுங்கு படத்தில் பாட உள்ள சிம்பு நேரடி தெலுங்கு படத்தில் எப்பொழுது நடிப்பார் என்று ரசிகர்கள் கேட்க தொடங்கி உள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.