மருந்து வாங்க பணமில்லை – கொடையாளிகளிடம் நிதி கோருகிறது சுகாதார அமைச்சு!

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, சுகாதார அமைச்சகம், கொடையாளிகளிடம் உதவியை கோரியுள்ளது.

சில வைத்தியசாலைகளில் ஓரிரு மாதங்களுக்கு மாத்திரமே மருந்துகள் இருப்பில் உள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, மருத்துவ நோயாளிகளுக்கான ( Clinical patients) மருந்து விநியோகத்தை இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தவும், ஒரு மாதத்திற்கு மட்டுமே மருந்துகளை வழங்கவும் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவசர அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசர பரிசோதனைகளை மட்டுமே மேற்கொள்ளுமாறு மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.