கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம் 9 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை தினம் 9 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்தாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

திருத்த பணிகள் காரணமாகவே நீர்வெட்டு செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Comments are closed.