ரம்புக்கனை படுகொலைக்கு நீதி கோரி தேசப்பிரிய போராட்டம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்றைய தினம் அம்பலாங்கொடையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ரம்புக்கனையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த குடும்பஸ்தருக்கு நீதி கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மஹிந்த தேசப்பிரியவின் சொந்த ஊர் அம்பலாங்கொடை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.