பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளையோர் கைது (வீடியோ)

தலங்கமவில் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதன்கிழமை (4) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் ஜனாதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் குழுவை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

10 ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரை பொலிஸார் கடத்திச் சென்றதாக SJB பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களால் மோதல் சூழ்நிலை ஏற்படுவதை தடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.