நாளாந்தம் மக்கள் எதிர்ப்பலை அதிகரிப்பு! – ஜனாதிபதிக்கு சோபித தேரர் எச்சரிக்கை.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் மத்தியில் நாளாந்தம் எதிர்ப்பலை அதிகரித்து வருகின்றது. எனவே, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி முழுமையாக ஏற்றுச் செயற்பட வேண்டும்.”

இவ்வாறு ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்ச குடும்பத்தினர் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. அந்தப் பணம் மீளத் திறைசேரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கான முடிவை ஜனாதிபதி எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் அண்ணன், தம்பி, மகன் எனப் பார்க்க வேண்டாம்; நாடு குறித்து சிந்தித்து இந்த முடிவை எடுங்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.