இன்று 20வது திருத்தச் சட்டம் இரத்து : 19ஆவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வருகிறது

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று இரவு வர்த்தமானியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் 20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, குறித்த தீர்மானம் பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் மீண்டும் 19ஆவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.