நெருக்கடிக்குத் தீர்வுகாண சட்டத்தரணிகள் மும்முரம்!

அரசிலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடலை நடத்தவுள்ளன.

தற்போதைய நெருக்கடி நிலைக்குத் தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள யோசனை என்பன தொடர்பில் இன்று இரு தரப்பினரும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இதற்கிடையில் சுயாதீன நாடாளுமன்றக் குழுவும் இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இடைக்கால அரசை அமைப்பதற்கான யோசனை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.