கொல்கத்தா அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த லக்னோ அணி.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லக்னோ அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

15வது ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக டி காக் 50 ரன்களும், தீபக் ஹூடா 41 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 25 ரன்களுக்கே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் வந்த ஆண்ட்ரியூ ரசல் (45) மற்றும் சுனில் நரைன் (22) ஆகியோரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டியதால் 14.3 ஓவரில் 101 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

லக்னோ அணியில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ள லக்னோ அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. மிரட்டல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ள லக்னோ அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.