மீண்டும் காலிமுகத்திடலில் உருப்பெறும் ‘கோட்டா கோ கம’..

கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
காலிமுகத்திடலில் கடந்த 30 நாட்களாக ஆர்ப்பாட்ட களமாக இருந்த கோட்டா கோ கம நேற்றையதினம் அரச ஆதரவு குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

அத்தோடு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் மைனா கோ கம மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக அங்கிருந்த கூடாரங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த நிலையில், நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.