மட்டக்களப்பில் மதுபானப் போத்தல்கள் சிக்கின!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிக் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் வெசாக் தினத்தில் விற்பனை செய்வதற்காக மறைந்துவைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான மதுபானப் போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மாலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அருகில் செல்லும் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே இந்த மதுபானப் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 750 கால் போத்தல்கள் மதுபானப் போத்தல்களும், 480 பியர் டின்களும், 94 பியர் போத்தல்கள் உட்பட சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியாக மதுபானப் போத்தல்கள் மீட்கப்பட்டன என்று களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரி.அபேயவிக்ரம தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.