10 கட்சிகள் சுயாதீனக் குழு நிபந்தனையின்றி ஆதரவு ரணிலிடம் நேரில் உறுதியளிப்பு.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரவளிக்கப்படும் என்று 10 கட்சிகளின் சுயாதீனக் கூட்டணி அறிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், 10 கட்சிகளின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது.

இதன்போதே அரசுக்கு ஆதரவளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனினும், அமைச்சுப் பதவிகள் எதுவும் ஏற்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.