மஹிந்தவும் நாமலும் தலைமறைவு; சபை அமர்வில் பங்கேற்கவில்லை!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்றைய நாடாளுமன்ற அமர்விலும் பங்கேற்கவில்லை. எனினும், முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் சபை அமர்வில் பங்கேற்றிருந்தனர்.

‘மே 9’ சம்பவத்தின் பின்னர் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்த மஹிந்த ராஜபக்ச, மறுநாள் 10ஆம் திகதி அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தங்கவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டத்திலும் மஹிந்த, நாமல் ஆகியோர் பங்கேற்கவில்லை. இன்றைய சபை அமர்விலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, ‘மே 9’ சம்பவத்துக்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்னமும் நாடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.