சிறையில் இருந்த போதிலும் ரஞ்சன் தனது மனச்சாட்சிக்குத் துரோகம் இழைக்கவில்லை!

ரஞ்சன் ராமநாயக்க ஒருபோதும் யாருக்கும் தனது மனச்சாட்சியைக் காட்டிக் கொடுக்காத உண்மையுள்ள மக்கள் பிரதிநிதி எனவும், சிறைவாசம் அனுபவித்த போதிலும் அவர் தனது சுயமரியாதையைக் காப்பாற்றினார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ரஞ்சனே ஒருமுறை கூறியது போல், “அவர்கள் அனைவரும் நண்பர்கள் தம்பி” என்ற கூற்று இந்நேரத்தில் மீண்டும் நினைவுக்கு வருவதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ரஞ்சன் அவர்களின் நண்பன் இல்லாததால் இன்னும் சிறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இன்று பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவைப் பார்வையிடச் சென்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் கலந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.