தந்தை, இரு மகன்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் குளத்தில் மூழ்கி பரிதாப மரணம்.

குளத்தில் குளித்துக் கொண்டிருந்த தந்தையும் இரண்டு மகன்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பரிதாபச் சம்பவம் மஹியங்கனை – தம்பராவவில் இடம்பெற்றுள்ளது.

குளிக்கச் சென்ற மூவரும் பல மணிநேரமாகியும் வீடு திரும்பாததால் நேற்று மாலை பிரதேச மக்கள் அந்த இடத்தில் தேடுதல் நடத்தினர். இதன்போது நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் 45 வயதுடைய தந்தையும் அவரது 10 மற்றும் 15 வயதுடைய மகன்களும் ஆவார்கள்.

அவர்களின் சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.