முன்னாள் அமைச்சர் விமலவீர இந்தியாவிடம் பாதுகாப்பு கோரவுள்ளார்!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை உரிய பாதுகாப்பு வழங்கப்படாத நிலையில், தம்மையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பிற்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை காரணமாக இன்னும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் மறைந்திருப்பதாக திஸாநாயக்க தெரிவித்தார்.

தான் அரசியலில் இருந்து ஒரு சதம் கூட சம்பாதிக்கவில்லை என்றும், தான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் முற்றாக தீயிட்டு எரித்து நாசம் செய்ததால் தான் இன்று இந்த நாட்டில் வீடற்றவனாக மாறியுள்ளதாகவும் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த தாக்குதல்கள் அனைத்தின் பின்னணியிலும் ஜே.வி.பி இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.