மத்திய வங்கி, திறைசேரியுடன் 57 நிறுவனங்கள் ரணிலுக்கு …..

புதிய அமைச்சரவையின் நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (31) வெளியிட்டார்.

அரசியலமைப்பின் 44வது சரத்தின் 44 (1) (அ) சரத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் 57 நிறுவனங்கள் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.