பாணதுறை சதொசவிலிருந்து உணவு பொருட்கள் திருட்டு!

பாணதுறை நல்லுருவ பிரதேசத்தில் உள்ள சதொச கடையொன்றில் இருந்து அரிசி மற்றும் தேங்காய் எண்ணை என்பன திருடப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன் மேலாளர் அளித்த புகாரின் பேரில், விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் கடையின் பின்பகுதியில் இருந்த தகரங்கள் அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடையில் பாதுகாப்பு கமராக்கள் இல்லை எனவும் கைரேகை அதிகாரிகளது கணிப்பின்படி ஜன்னல் ஊடாக திருடர்கள் உள்ளே சென்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அரிசி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.