மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 அரிசி மூடைகள் சிக்கின.

நுகர்வோர் அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சிலாபத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் 5 கிலோகிராம் எடையுள்ள சம்பா அரிசியின் 100 மூடைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதையடுத்துச் சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.