கிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி! – மற்றொருவர் படுகாயம்

கிளிநொச்சி, கனகபுரம் டிப்போ வீதியில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த மூன்று இளைஞர்களில் இருவர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

படுகாயமடைந்த இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்தில் கிளிநொச்சி, கோணாவில் – காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த ஞானகுமாரன் கிருஷாந்தன் (வயது 18) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சர்வநாதன் பவிக்சன் (வயது 20) படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்த மற்றைய இளைஞர் தொடர்பான தகவல் கிடைக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.