8-9 போராட்டத்தை நிறுத்தச் சொன்ன போலீஸ் : முடியாது என்ற நீதிமன்றம் !

இம்மாதம் 8ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் கோட்டை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா நிராகரித்தார்.

குற்றம் நடந்தால் அதைக் கையாள்வதற்கான அதிகாரம் உள்ளதால், சம்பந்தப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி சமர்ப்பித்த கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.