மக்கள் அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் ரணில் பதவி வகிக்க முடியாது! : குமார் குணரத்தினம் (காணொளி)

ஜன கோபுரம் இயக்கத்தில் உள்ளது! மக்கள் அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் யாரும் அரசியல் முடிவுகளை எடுக்க முடியாது! ரணிலால் பதவி வகிக்க முடியாது! போராட்டத்தின் மூளையாக செயல்பட்ட குமார் குணரத்தினம் பிரகடனம்!

கோத்தபாய ராஜபக்ச உடனடியாக ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், மக்கள் அதிகாரம் இல்லாத ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதில் ஜனாதிபதி பதவியை கூட வகிக்க முடியாது எனவும் முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் மக்கள் சக்தியின் தூண் இருப்பதாகவும், அந்த மக்கள் சக்தியைப் பொருட்படுத்தாமல் எவராலும் அரசியல் முடிவுகளை எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.