ரணிலுக்கு ஆதரவாக ரொஷான் அழைப்பு விடுத்த கூட்டத்தில் டலஸுக்கு அதிக ஆதரவு!

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக்குவதற்கு முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்கத் தயார் என பெரும்பான்மையான மக்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி, ரணில் பொஹொட்டுவ உறுப்பினர் இல்லை எனவும், டலஸ் அழகப்பெரும பொஹொட்டுவ உறுப்பினர் என்பதால் அவருக்கு ஆதரவளிக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி விவாதங்களுக்கு மத்தியில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.