‘மொட்டு’வின் டலஸும் போட்டி.

கோட்டாபய ராஜபக்‌ச பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதிப் பதவிக்குத் தான் போட்டியிடுவேன் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அதற்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன.

இதன்போது தான் வேட்புமனுவைத் தாக்கல் செய்வேன் என்று அவர் அறிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.