முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் பலி!

தம்புள்ளை கந்தளம கும்பக்கடன்வல ஏரியில் தந்தையுடன் நீரில் நீந்திக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் உயிர்காப்புப் படையினர் மற்றும் கிராமப் பணியாளர்களுடன் இணைந்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கும்புக்கடன்வல பிரதேசத்தை சேர்ந்த தம்புள்ளை கண்டலம டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயத்தில் ஆண்டு இரண்டில் கல்வி கற்கும் சனுத் சத்சர என்ற சிறுவனே முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.