225ம் வேண்டாம் என்ற கோஷம் நிரூபணமானது! நாடாளுமன்ற கருத்தும், மக்கள் கருத்தும் ஒன்றல்ல! (காணொளி)

நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரும் வேண்டாம் என்று சொன்ன கோஷம் இன்று நிரூபணமானது! ரணிலும் அதிகம் ஆட வேண்டியதில்லை! ஏனென்றால் நாடாளுமன்றத்தின் கருத்துக்கும் வெளியுலகின் கருத்துக்கும் ஒளி நூற்றாண்டுகளின் வித்தியாசம் உண்டு!

பாராளுமன்றத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரது சதவீதத்திற்கும், வெளியில் உள்ள மக்களின் கருத்துக்கும் இடையில் பல ஒளி வருட இடைவெளி இருப்பதாகவும், 69 இலட்சம் வாக்குகளையும் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தையும் பெற்றிருந்த கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்குவதற்கு நாட்டின் மக்கள் சக்தி பயன்படுத்தப்பட்டது என இன்று (20) பிற்பகல் முன்னணி சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். .

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது ஜனாதிபதித் தேர்தலில் தெளிவாக நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்த புபுது ஜயகொட, பாராளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் கருத்து, அரசியல் அபிலாஷைகளை சிறுமைப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்திற்கு வெளியே 200 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் கேள்விகள் மற்றும் குறைகளை பாராளுமன்றம் உதாசீனப்படுத்தியுள்ளது என்றார்.

நீண்ட காலமாக நாட்டு மக்களுக்கு பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அலரி மாளிகைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ‘அதிகாரம் மக்கள் கையில்’ என்ற கோசங்களை யதார்த்தமாக்க வேண்டியதன் உண்மையை இன்றை பாராளுமன்றத்தில் உறுதி செய்துள்ளது என புபுது ஜயகொட மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி நியமன வாக்கெடுப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் புபுது ஜயகொட இதனை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.