வடமராட்சியில் கொரோனா; வயோதிபர் ஒருவர் மரணம்!

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகின்ற நிலையில், யாழ். வடமராட்சியில் ஒருவர் தொற்றுக்குள்ளாகி சாவடைந்துள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த 91 வயதுடைய வயோதிபரே கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த குறித்த வயோதிபருக்குக் கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.