கைதான போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்யுங்கள் அரசை வலியுறுத்திக் கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் போராட்டச் செயற்பாட்டாளர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் இன்று கவனயீர்ப்புப் போராடடம் முன்னெடுக்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஒன்றிணைந்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இந்தப் போராட்டத்தை நடத்தின.

இதில் பங்கேற்றவர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு பதாகைகளைத் தாங்கியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.