யாழ். பொலிஸ் நிலையத்தில் இரு இளைஞர்களை சித்திரவதை செய்த பொலிஸாரில் 03 பேருக்கு 10 வருட சிறை!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இளைஞர்கள் இருவரை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் அதே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வசிக்கும் இரு இளைஞர்களை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்து, சிறைத்தண்டனையை 2017 ஒக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.