சர்வகட்சி அரசு தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதில் சஜித் அணி தடுமாற்றம்.

“சர்வகட்சி அரசுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.”

இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வகட்சி அரசுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு இன்னும் விடுக்கப்படவில்லை. எனினும், அமைச்சுப் பதவிகளை மட்டும் இலக்காகக்கொண்ட அரசாக அது அமையக்கூடாது. நாம் அமைச்சுப் பதவிகளைப் பெறப்போவதும் இல்லை.

எனினும், சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். அரசின் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மாத்திரமே அந்த ஒத்துழைப்பு வழங்கப்படும். தற்போதுவரை அந்த வெளிப்படைத் தன்மையைக் காணமுடியவில்லை. நாமும் இறுதி முடிவை எடுக்கவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.