வீசா ரத்து செய்யப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு மைத்திரிபால ஆதரவு…

அரகலய போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய பிரஜையான கெய்லி பிரேசரின் விசாவை (எம்இடி/002918 இலக்கம்) இரத்து செய்ய இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியும், இளைஞர் முன்னணியும் இந்த விடயத்தில் அவரது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முன்வந்துள்ளன.

இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான திரு மைத்திரிபால சிறிசேனவுடன் பிரித்தானிய யுவதிக்கும் பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதன்படி, பாராளுமன்றத்திலும், அரசியல் மற்றும் சமூக இயக்கங்களிலும் அவளது உரிமைகளுக்காக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.