இந்தியாவிடமிருந்து முதலாவது உளவு விமானம் இலங்கைக்கு!

இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொள்ளும் இரண்டு டோர்னியர் – 228 கடல்சார் உளவு விமானங்களில் முதலாவது விமானம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியது.

இந்த விமானத்துக்கு விமான நிலையத்தில் நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கைக்கு வருகை தந்த இந்தியக் கடற்படையின் உப தளதிபதி வைஸ் எட்மிரல் சதீஸ் என் கோர்மடே, இந்த விமானத்தை இலங்கை விமானப்படையிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.