இளைஞர் சடலமாக மீட்பு!

நுவரெலியாவில் காணாமல்போன இளைஞர் ஒருவர் 12 நாட்களின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா, பம்பரக்கலை தோட்டத்தில் வசிக்கும் 20 வயதுடைய சுந்தரலிங்கம் சசிதரன் என்ற இளைஞர் கடந்த 3ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்தார். இந்நிலையில், இன்று காலை நுவரெலியா சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடையில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞரைக் காணவில்லை என்று அவரின் பெற்றோர் பொலிஸில் கடந்த 6ஆம் திகதி முறைபாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டில், கடந்த 3ஆம் திகதி வீட்டுக்கு விறகு தேடி வருகின்றார் எனக் கூறிவிட்டுச் சென்ற இளைஞர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை எனவும், விறகு தேடிச் சென்ற பகுதியில் ஆற்றைக் கடக்க முற்பட்டபோது, கால் தவறி ஆற்றில் விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சி அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. காட்சியின் மூலம் உறுதிசெய்யப்பட்டிருந்தது எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், தேடுதல் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையிலேயே குறித்த இளைஞர் நுவரெலியா சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையில் விசேட குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.