சர்வகட்சி அரசு தொடர்பில் நாளை தீர்க்கமான முடிவு!

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை நடைபெறவுள்ள ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சர்வகட்சி அரசு தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று நம்புகின்றோம்.”

இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது சர்வகட்சி அரசு தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று நம்புகின்றோம்.

அதேவேளை, புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் ஆராயப்படும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி தற்போது எந்தக் கட்டத்தில் உள்ளது என்பது தொடர்பில் இதன்போது நிதி அமைச்சரான ஜனாதிபதி விளக்கமளிப்பார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.