சாப்பிட மட்டுமல்ல இனி பேசவும் முடியாது : தொலைபேசி, பிராட்பேண்ட் , டிவி கட்டணங்கள் அதிகரிப்பு.

தொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் டிவி கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனைத்து கைத் தொலைபேசி மற்றும் வீட்டு தொலைபேசி சேவை கட்டணங்கள், பிராட்பேண்ட் கட்டணங்கள், தொலைக்காட்சி சேவை கட்டணங்களை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த கட்டண உயர்வு எதிர்வரும் 5ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, மொபைல் மற்றும் ஃபிக்ஸட் போன் சேவைக் கட்டணங்கள் மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்கள் 20% ஆகவும், கட்டண தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் 25% ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளன.

இது தவிர கடந்த இடைக்கால பட்ஜெட்டில் இருந்து உயர்த்தப்பட்ட வட் வரியும் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.