சஜித் அணிக்கு ஐ.தே.க. அழைப்பு.

அனைத்துக் கட்சி அரசை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சு நடத்துகின்றது என்று அக்கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அணி சேர்வதற்கான கதவுகள் திறந்தே உள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்கவும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைவது அவசியம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.