ஓபிஎஸ் ஒரு பச்சோந்தியை போல் நடந்து கொள்கிறார் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஓ.பன்னீர்செல்வம் பச்சோந்தியை போல் நடந்துகொள்கிறார் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற வன்முறை சம்பவம் காரணமாக, அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் 72 நாட்கள் பிறகு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, ஜூலை 11ம் தேதி நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசினார். ஆட்சியில் இருப்பவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக அலுவலகத்தை சேதப்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் 15 மாத திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என கூறுனார்.

இதனையடுத்து பேசிய அவர், அதிமுகவில் பிளவு ஏதும் இல்லை என்றும், கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் கொள்ளைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கியவரை போன்று செயல்பட்டவரை ஒருபோதும் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் ஓ.பன்னீர்செல்வம் பச்சோந்தி போல் நடந்துகொள்கிறார் எனவும் என்ற எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.

Leave A Reply

Your email address will not be published.