சீர்திருத்த இல்லத்தைவிட்டு வெளியேறிய 6 சிறுமிகள்: இருவர் திரும்பினர்

மும்பை: மும்பையில் உள்ள சீர்திருத்த இல்லத்திலிருந்து ஆறு சிறுமிகள் தப்பியச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இரு சிறுமிகள் மீண்டும் இல்லத்திற்கே திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“கோவண்டி சியோன்-டிரோம்பே சாலையில் அமைந்துள்ள சீர்திருத்த இல்லத்திலிருந்து 15-17 வயதுக்குட்பட்ட சிறுமிகள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஜன்னல் கம்பிகளை உடைத்து தப்பியுள்ளனர்.

அவர்களில் இரண்டு சிறுமிகள் நேற்று இரவே சீர்திருத்த இல்லத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், சிறுமிகள் தப்பிச் செல்ல உதவியதாக இதுவரை யாரும் கண்டறியப்படாததால், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.