இந்திய பெண்கள் அணி தோல்வி: இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்தது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று பிரிஸ்டலில் நடந்தது. டாஸ் ஜெயித்து இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அந்த அணியின் அபார பந்து வீச்சில் இந்தியா விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வரிசையில் முதல் 5 வீராங்கனைகள் ஒற்றை இலக்கில் அவுட் ஆனார்கள். அதன் பின்னர் தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் தாக்கு பிடித்து விளையாடினார்கள். இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்தது. ரிச்சா கோஷ் 33 ரன்னும், தீப்தி சர்மா 24 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீராங்கனைகளான ஷோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டும், சாரா கிளென் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சோபியா டங்லே 49 ரன்னும், ஆலிஸ் கேப்சி 38 ரன்னும், டேனி வியாத் 22 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. அடுத்20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.து இரு அணிகளும் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. முதல் போட்டி வருகிற 18-ந்தேதி நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.