யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி நிகழ்வு!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ். வைத்தியசாலை வீதியிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் க.மகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், யாழ். மாநகர பிரதி மேஜர், யாழ். மாநகர ஆணையாளர், சமூகப் பிரதிநிதிகள், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது காந்தீயம் ஏடு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் க.மகேசனால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் மகாத்மா கந்திக்கு மிகவும் பிடித்தமான ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற பாடலும் மாணவர்களால் இசைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.